தமிழ்நாடு

அனைத்து இடங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறோம்- கனடா மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை

Published On 2022-09-25 04:35 GMT   |   Update On 2022-09-25 04:35 GMT
  • இடஒதுக்கீடு அனைவருக்கும் சம விகிதத்தில் தரப்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் பேச்சு
  • எண்ணற்ற சமூக நீதி திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளப்படுத்தி வருவதாக பெருமிதம்

கனடாவில் நடைபெற்ற சமூக நீதிக்கான பன்னாட்டுப் பெரியார் மனிதநேய மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

எனது திராவிட மாடல் ஆட்சியின் மையக்கொள்கை என்பது மனிதநேயமும் சமூக நீதியும்தான். அனைத்து இடங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறோம். வகுப்புரிமை எனப்படும் இடஒதுக்கீடு அனைவருக்கும் சம விகிதத்தில் தரப்பட்டு வருகிறது.

எண்ணற்ற சமூக நீதி திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை வளப்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியை மேலும் உச்சத்திற்கு கொண்டு வரவே திராவிட மாடல் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியல்களின் அடித்தளத்தில் நிற்கக்கூடிய இயக்கம்தான் திமுக. எங்களின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News