ஈரோடு இடைத்தேர்தல்: முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் இல்லை- கலெக்டர் விளக்கம்
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெளிப்படை தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ந்தேதி நடந்து முடிந்தது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெளிப்படை தன்மையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் இல்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
2 சுற்றுகள் நிறைவடைந்தும், முதல் சுற்று முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முதல் சுற்று முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு 3வது சுற்று தொடங்கும் என்று அவர் கூறினார்.