தமிழ்நாடு

வேப்பேரி-புரசைவாக்கத்தில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2023-07-27 10:01 GMT   |   Update On 2023-07-27 10:01 GMT
  • பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • பேக்கர்ஸ் ரோடு பகுதியில் ஒரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை:

சென்னை வேப்பேரி, புரசைவாக்கத்தில் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஒருவர் புரசைவாக்கம் தாக்கர் தெருவில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று காலை 9 மணி அளவில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

வேப்பேரி ஜோதி ராமலிங்கம் தெருவில் ஒருவர் வீட்டிலும் பேக்கர்ஸ் ரோடு பகுதியில் ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News