தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்- தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு

Published On 2024-03-21 12:37 GMT   |   Update On 2024-03-21 12:37 GMT
  • டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல்.
  • கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மனுவில," தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்.

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி படுதோல்வியை தழுவுவதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை.

கட்சி உடைந்து நிற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News