தமிழ்நாடு
புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு தே.மு.தி.க. பொறுப்பாளர்கள் நியமனம்
- புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு கழக உயர்மட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர் உசேன், கழக விவசாய அணி துணைச் செயலாளர் கே.திருநாவுக்கரசு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம்.
- புதுவை மாநிலத்தின் நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், கிளை கழகம் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் புதுவை பாராளுமன்ற தொகுதிக்கு கழக உயர்மட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகீர் உசேன், கழக விவசாய அணி துணைச் செயலாளர் கே.திருநாவுக்கரசு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு புதுவை மாநிலத்தின் நிர்வாகிகள், தொகுதி பொறுப்பாளர்கள், கிளை கழகம் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.