தமிழ்நாடு

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பலூன் பறக்கவிட்ட கலெக்டர்

Published On 2024-03-25 06:42 GMT   |   Update On 2024-03-25 06:50 GMT
  • மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  • போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியை ஓசூர் ராம்நகரில், கலெக்டர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஓசூர் பஸ் நிலையம் அருகே ஒரு கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்து தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூனை, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எம். சரயு பறக்கவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக் குறள், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியை ஓசூர் ராம்நகரில், கலெக்டர் கே.எம். சரயு தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர், அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே, அணி வகுப்பு நிறைவடைந்தது.

இதில், டிஎஸ்பி பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், மத்திய பாதுகாப்பு படை போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News