தமிழ்நாடு

"மஞ்சப்பை விருதுகள்" பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2023-01-05 03:29 GMT   |   Update On 2023-01-05 03:29 GMT
  • ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை விதித்துள்ளது.
  • முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதில் பிளாஸ்டிக் பைகளும் அடங்கும். இந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளமான https://kanyakumari.nic.inபதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 1-5-2023 ஆகும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News