தமிழ்நாடு

சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் சேவையில் மாற்றம்

Published On 2023-10-13 07:03 GMT   |   Update On 2023-10-13 07:03 GMT
  • ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
  • வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 22-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மற்றும் 22-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை ரெயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சென்னை சென்ட்ரல்-பாலக்காடுக்கு இன்று முதல் 29-ந் தேதி வரை இயக்கப்படும் பாலக்காடு விரைவு ரெயில் (22651), பாலக்காடு டவுன்-பாலக்காடு சந்திப்பு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

பாலக்காடு-சென்னை சென்ட்ரலுக்கு இன்று முதல் 30-ந் தேதி வரை புறப்பட வேண்டிய விரைவு ரெயில் (22652), பாலக்காடு சந்திப்பு-பாலக்காடு டவுன் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News