தமிழ்நாடு

அனுமதியின்றி பிரசாரம்: பா.ஜனதா-அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

Published On 2024-04-16 06:14 GMT   |   Update On 2024-04-16 06:14 GMT
  • பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார்.
  • பிரசாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்தவிதமான அனுமதியும் அவர்கள் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

கடையநல்லூர்:

தென்காசி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கடையநல்லூர் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். ஆனால் பிரசாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எந்தவிதமான அனுமதியும் அவர்கள் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தேர்தல் பிரிவு அலுவலர் ஜீவானந்தம் கொடுத்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் பா.ஜனதா மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News