தமிழ்நாடு

திருமண ஆசை வார்த்தை கூறி பட்டதாரி பெண் கற்பழிப்பு- காதலன் கைது

Published On 2023-07-27 06:12 GMT   |   Update On 2023-07-27 06:12 GMT
  • திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார்.
  • இளம்பெண் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தாய் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். 2 தங்கைகள் உள்ளனர்.

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், கல்லூரணியை சேர்ந்த ஜெயக்குமார் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் 2 பேரும் காதலித்தனர்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறிய ஜெயக்குமார் இளம்பெண்ணிடம் நெருங்கி பழகியுள்ளார். இதனால் அவர் கர்ப்பமானார். அப்போது ஜெயக்குமார் கூறியதால் காதலி கர்ப்பத்தை கலைத்தாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் இளம்பெண் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார். அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் காதலனின் பெற்றோர் தாவீது (50), ஜெபமலர் (45), சகோதரி ஜான்சிமேரி (26) ஆகியோரிடம் திருமணம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் ஜெயக்குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறியதோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் எம்.ரெட்டியப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார், அவரது பெற்றோர், சகோதரி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News