தமிழ்நாடு

ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம்

Published On 2022-10-05 03:05 GMT   |   Update On 2022-10-05 03:05 GMT
  • சோத்துப்பாக்கத்தில் வந்தவாசி சாலையில் பிரியாணி கடை நடத்துபவர் ஞானவேல்.
  • ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞானவேல் செய்தார்.

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கத்தில் வந்தவாசி சாலையில் பிரியாணி கடை நடத்துபவர் ஞானவேல். பத்து ரூபாய் நாணயங்களை மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர், பவுஞ்சூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் வாங்குவதில்லை என்ற புகார் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஞானவேல் தனது பிரியாணி கடைக்கு ரூ.10 நாணயம் கொண்டு வந்து கொடுத்தால் ரூ.120 மதிப்பிலான பிரியாணியை இலவசமாக கொடுத்து அனுப்பினார். இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

ரூ.10 நாணயத்துக்கு பிரியாணி வழங்கி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞானவேல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News