தமிழ்நாடு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய கமிட்டி அமைப்பு

Published On 2023-01-13 11:24 GMT   |   Update On 2023-01-13 11:24 GMT
  • இரு குழுவினருக்கு இடையே கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்தை நடைபெற்றது.
  • ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை புதிதாக அமைக்கப்பட்ட கமிட்டி வழங்கும்

மதுரை:

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பிரச்சனை தொடா்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து சமுதாயக் குழுக் கூட்டத்தை நடத்த ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டது. அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக் குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என உத்தரவிட்டுள்ளது.

இதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக இரு குழுவினருக்கு இடையே கலெக்டர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்தை நடைபெற்றது. மொத்தம் 62 பேர் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து சமூதாயத்தினர் கொண்ட 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ளவர்கள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

Similar News