தமிழ்நாடு

குடும்பச்சண்டை- மொழி தெரியாமல் சுற்றிய 'ஒடிசா' மூதாட்டி மீட்பு

Published On 2023-11-17 06:53 GMT   |   Update On 2023-11-17 07:12 GMT
  • குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.
  • பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் வடமாநில மூதாட்டி ஒருவர் மொழி தெரியாமல் சுற்றுவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மூதாட்டியை அதிகாரிகள் மீட்டு விசாரித்தனர். அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி மாஜி (வயது 70) என்பதும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் மூலம் இங்கு வந்து இருப்பதும் தெரிந்தது.

இதைத்தொடர்ந்து பத்மாவதி மாஜியை முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் தங்க வைத்தனர். ஆனால் அவர் அங்கு தங்க விருப்பம் இல்லை எனவும் திரும்பவும் ஒடிசாவில் உள்ள குடும்பத்தினரிடம் செல்ல விரும்புவதாக தெரிவித்தனர். இது பற்றி ஒடிசாவில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த 2 பெண் போலீசார் மற்றும் ஒரு ஆண் போலீசாரிடம் பத்மாவதி மாஜியை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக மூதாட்டி பத்மாவதி மாஜி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, சமூக நல அலுவலர் கல்யாணி, ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகி ஜான்சி, வழக்கு பணியாளர் கலையரசி உடன் இருந்தனர்.

Tags:    

Similar News