தமிழ்நாடு

தாம்பரத்தில் மேலும் 6 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

Published On 2024-02-07 10:19 GMT   |   Update On 2024-02-07 10:19 GMT
  • ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  • துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரம்:

சென்னை தாம்பரத்தில் இன்று மேலும் 6 துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏகே 47 துப்பாக்கியில் இருந்து வந்த குண்டுகள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், இன்று காந்தி சாலை பகுதியில் மேலும் 6 குண்டுகள் சிதறி கிடந்துள்ளன.

துப்பாக்கி குண்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News