தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் அதிகாலையில் கோர விபத்து- 6 பேர் படுகாயம்

Published On 2023-11-13 07:45 IST   |   Update On 2023-11-13 07:45:00 IST
  • ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதியது.
  • காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணாநகரில் இன்று அதிகாலை நேரத்தில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நடந்து சென்றவர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் 2 தூய்மை பணியாளர்கள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News