தமிழ்நாடு செய்திகள்

திருத்தணி கோவிலில் இன்று 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2023-09-17 11:57 IST   |   Update On 2023-09-17 11:57:00 IST
  • திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது.
  • மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது.

திருத்தணி:

திருத்தணி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆவணி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்தம் நாளான இன்று திருத்தணி முருகன் கோவிலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

இதனால் மலைக்கோவில் முழுவதும் புதுமண ஜோடி மற்றும் திருமண கோஷ்டியினர் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News