தமிழ்நாடு செய்திகள்

தஞ்சையில் சோகம்: தடுப்புச்சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

Published On 2024-01-20 07:51 IST   |   Update On 2024-01-20 10:31:00 IST
  • தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் அதில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சை:

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு காரில் 11 பேர் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் நேற்று இரவு தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சென்றுகொண்டிருந்தது. மனோரா என்ற பகுதியில் சென்றபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனால் சாலையோர தடுப்பு சுவர் மீது கார் வேகமாக மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார் டிரைவர் உறங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News