தமிழ்நாடு

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் புத்தாண்டில் 29 குழந்தைகள் பிறந்தன

Published On 2024-01-02 03:11 GMT   |   Update On 2024-01-02 03:11 GMT
  • சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 9 குழந்தைகள் பிறந்தன
  • ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன.

சென்னை:

நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அனைவரும் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் ஒன்று கூடி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும் சிலர் தேவாலயங்கள், கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். மேலும் அனைவரும் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு கொடுத்தும் மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மதியம் வரை சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 29 குழந்தைகள் பிறந்தன. அதன்படி, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 9 குழந்தைகள் பிறந்தன. இதில் 5 ஆண் குழந்தைகள், 4 பெண் குழந்தைகள் ஆகும். இதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. மேலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 4 குழந்தைகளும், கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் 6 குழந்தைகள் பிறந்தன.

ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பிறந்தன. இதில் 6 ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகள் ஆகும். நேற்று பிறந்த இந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்தநாள் கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News