தமிழ்நாடு செய்திகள்
விருத்தாசலத்தில் தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

விருத்தாசலத்தில் தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-03-02 16:02 IST   |   Update On 2022-03-02 16:02:00 IST
புதுக்கூரைப்பேட்டை பகுதியில் செயல்படும் குறைந்த அளவிலான முந்திரி மதிப்பு கூட்டு அலகு மற்றும் அரசு தோட்டக்கலை பண்ணையில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருதாசலம் பகுதியில் புதுக்கூரைப்பேட்டை பகுதியில் செயல்படும் குறைந்த அளவிலான முந்திரி மதிப்பு கூட்டு அலகு மற்றும் அரசு தோட்டக்கலை பண்ணையில் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அரசு தோட்டக்கலை பண்ணையில் நடவு செய்யும் வகைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சின்ன கண்டிகுப்பம் கிராமத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

கலெக்டருடன் வேளாண்துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுதாமதி, கோட்டாட்சியர் ராம்குமார், நேர்முக உதவியாளர் அரங்க நாதன், தாசில்தார் தனபதி, தோட்டக்கலைத் துறை சுரேஷ், விருத்தாசலம் தோட் டக்கலை உதவி இயக்குனர் ஆனந்தி மற்றும் அரசு அதிகாரிகள் சென்றனர்.

Similar News