தமிழ்நாடு செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே காரில் எடுத்து சென்ற ரூ.2.66 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
காரில் எடுத்து சென்ற ரூ.2.66 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
காவேரிப்பட்டணம்:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பாலக்கோடு& காவேரிப்பட்டணம் சாலையில் பன்னிஹள்ளி அருகே சென்ற காரை தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த தோட்டக்கலை துறை உதவி பொறியாளர் ராமசாமி, சிறப்பு சப்& இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், கண்ணையன் உள்ளிட்ட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 500 எடுத்து சென்றது தெரிய வந்தது. விசாரணையில் எலுமிச்சனஹள்ளி பகுதியை சேர்ந்த சிவக்குமார்(வயது 43) என்பதும்அவரது மனைவி தனியார் வங்கியில் பணிபுரிவதாகவும், மாங்காய் வியாபாரத்துக்காக எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் உரிய ஆவணமின்றி எடுத்து சென்றதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகனிடம் ஒப்படைத்தனர்.