தமிழ்நாடு செய்திகள்
407 பேர் மனுதாக்கல் - காஞ்சீபுரம் மாநகராட்சியில் தே.மு.தி.க. போட்டி இல்லை
35-வது வார்டில் மனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகாலட்சுமிக்கு 20 வயது ஆகியிருந்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
2 கட்டமாக நடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு- ஹால் டிக்கெட் இன்று பதிவிறக்கம் செய்யலாம்
கணினி வழி தேர்வுக்கான பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள்நுழைவு மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை:
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1 ஆகிய காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கணினி வழியாக 2 அட்டவணைகளின்படி நடைபெறுகிறது.
வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மற்றும் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆகிய தேதிகளில் காலை, மாலை இரு வேளைகளில் இத்தேர்வு நடைபெற உள்ளது.
19-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அன்று தேர்வு நடைபெறாது. இத்தேர்வுக்குரிய மாவட் டத்தின் நுழைவு சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in-ல் தேர்வர்கள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு உள்ளீடு செய்து இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வர்கள் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்திற்கு நுழைவுசீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும், புகைப்படத்தின் அசல் பிரதியையும் எடுத்து வர வேண்டும்.
தேர்வு அன்று தேர்வர்கள் காலை 7.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் 1.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகை புரிய வேண்டும். தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேற்படி இந்த கணினி வழி தேர்வுக்கான பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள்நுழைவு மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி இணையதளத்தில் பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நுழைவு சீட்டில் மாவட்டம், நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நுழைவு சீட்டில் உள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி தேர்வை எழுத அறிவுறுத்தப்படுகிறது. தேர்வு மையம் மாற்றம் குறித்த எவ்வித விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.