தமிழ்நாடு
திமுக

காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் ஒரே கட்சியில் மாமனார்-மருமகள் போட்டி

Published On 2022-02-05 11:21 GMT   |   Update On 2022-02-05 11:28 GMT
தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில்18 வார்டுகள் உள்ளன. தலைவர் பதவி பொது என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வில் முன்னாள் பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, 5-வது வார்டு தமிழ்செல்வன், 10-வது வார்டு கிருஷ்ண மூர்த்தி, 18 வது வார்டு ராமலிங்கம் உள்ளிட்ட 6 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மற்ற 9 பேர் புதிய முகங்களாக தேர்வு செய்யப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தி.மு.க., நகர செயலாளர் முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் 17 -வது வார்டில் போட்டியிடுகிறார். இவரது மருமகள் ஆனந்தி வசந்த் 15-வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தி.மு.க.வில் மாமனாரும், மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவதுஅந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News