தமிழ்நாடு செய்திகள்
பொய் சொல்லி திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த கர்நாடக தம்பதி
உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என ஏன் பொய் பேசுகிறீர்கள் என்று தம்பதியை எச்சரித்த போலீசார் முழு ஊரடங்கு என்பதால் காரில் பயணிக்க அனுமதி இல்லை என காரை திருப்பி அனுப்பினர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் காய்கறி, பால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
மற்ற சரக்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து கைக்குழந்தையுடன் தம்பதியினர் வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் திருப்பூருக்கு மருத்துவமனைக்கு செல்வதாக கூறினர். அப்போது போலீசார் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் குழந்தையை மருத்துவமனையில் காண்பிப்பதற்காக அனுமதி வாங்கப்பட்டுள்ளதா? அதற்கு உரிய மருத்துவ சீட்டு ஆவணம் ஏதும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
அப்போது அந்த தம்பதியினர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து உண்மையாகவே குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையா என போலீசார் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்கவே காரில் வந்த தம்பதியினர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வந்ததாக தெரிவித்தனர்.
உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என ஏன் பொய் பேசுகிறீர்கள் என அவர்களை எச்சரித்த போலீசார் முழு ஊரடங்கு என்பதால் காரில் பயணிக்க அனுமதி இல்லை என காரை திருப்பி அனுப்பினர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் காய்கறி, பால், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது.
மற்ற சரக்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியிலிருந்து கைக்குழந்தையுடன் தம்பதியினர் வந்த காரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் திருப்பூருக்கு மருத்துவமனைக்கு செல்வதாக கூறினர். அப்போது போலீசார் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் குழந்தையை மருத்துவமனையில் காண்பிப்பதற்காக அனுமதி வாங்கப்பட்டுள்ளதா? அதற்கு உரிய மருத்துவ சீட்டு ஆவணம் ஏதும் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
அப்போது அந்த தம்பதியினர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து உண்மையாகவே குழந்தைக்கு உடல்நிலை சரியில்லையா என போலீசார் கிடுக்கிப்பிடி கேள்வி கேட்கவே காரில் வந்த தம்பதியினர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வந்ததாக தெரிவித்தனர்.
உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என ஏன் பொய் பேசுகிறீர்கள் என அவர்களை எச்சரித்த போலீசார் முழு ஊரடங்கு என்பதால் காரில் பயணிக்க அனுமதி இல்லை என காரை திருப்பி அனுப்பினர்.