தமிழ்நாடு
கோப்புப்படம்

ஓசூரில் கல்லூரி மாணவர் கொலை: கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2022-01-09 08:01 GMT   |   Update On 2022-01-09 08:01 GMT
ஓசூரில் கல்லூரி மாணவரை கடத்தி சென்று கத்தியால் குத்தி கொன்ற 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஓசூர்: 

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தைச் சார்ந்த மகபூப்பாஷா என்பவரின்  மகன் சேக்முகமது அப்சல் (வயது 21). 

தனது தம்பியுடன் ஒசூர் ராம்நகரில் உள்ள உறவினர் ஒருவருரது  வீட்டில் தங்கி  அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் இரண்டாமாண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்த பிறகு தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணிவரை பகுதிநேர ஊழியராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி,  ஓசூர் பாரதிதாசன் நகர் அருகேயுள்ள வள்ளுவர் நகரில். அவர் பிணமாக கிடந்தார் அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தது.

இதுதொடர்பாக, ஓசூர் சிவசக்தி நகரை சேர்ந்த ராஜேஷ் (24) என்பவரை பிடித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் மீது உத்தனபள்ளி, ராயக்கோட்டை போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் கொலை வழக்கு இருந்தது தெரியவந்தது.

சம்பவத்தன்று இரவு, ஓசூர் பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஷேக்முகமது அப்சலை, ராஜேசும், அவரது நண்பர் திலீப்குமார் என்பவரும் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று சம்பவ இடத்தில் வைத்து வழிப்பறி செய்ய முயன்றனர். 

ஆனால் ஷேக்முகமது அப்சலிடம் பணம்  எதுவும் இல்லாததால், ஆத்திரமடைந்த அவர்கள் கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொன்றுவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது. திலீப்குமார் மீது ஓசூர் டவுன், ஓசூர் அட்கோ ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. 

இந்த நிலையில்,, போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜேசையும்,  திலீப்குமாரையும் கைது செய்தனர். கைதான இருவரும்  சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.



இந்த நிலையில், அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டிக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று, ராஜேஷ் மற்றும் திலீப்குமார் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, நேற்று  உத்தரவு பிறப்பித்தார்.
Tags:    

Similar News