தமிழ்நாடு
தற்கொலை

காதல் தோல்வியால் சாணிபவுடர் குடித்து கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை

Published On 2022-01-09 05:08 GMT   |   Update On 2022-01-09 05:08 GMT
நம்பியூர் அருகே காதல் தோல்வியால் கத்தியால் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (24). புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று விஜய் மதியம் ஒரு மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை வேலுச்சாமி தேடிச் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் அருகே மயக்கமடைந்த நிலையில் இருந்தார். மேலும் அவர் மீது சாணிபவுடர் வாசனை அடித்தது. உடனடியாக அவரிடம் விசாரித்த போது நான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், தங்கை திருமணம் ஆகாமல் உள்ளதால் எனது காதல் நிறைவேறாது என நினைத்து நான் சாணி பவுடர் குடித்தும், பேனா கத்தியால் கழுத்து மற்றும் இடது மணிக்கட்டு பகுதிகளில் அறுத்து கொண்டதாகவும் கூறினார்.

உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விஜய் இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து விஜயின் தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து விஜயின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News