தமிழ்நாடு செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது- மத்திய உணவுத்துறை செயலாளர் பாராட்டு
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் 50 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர் என்று மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே வருகை தந்தார்.
அவர் ஊட்டியில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்தில் இருந்து அரிசி கொள்முதல் செய்த அளவு மும்மடங்காக உயர்ந்துள்ளது. 9 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 29 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் உயர்ந்துள்ளது.
அதேபோல, பெட்ரோல் நுகர்வில் நாட்டில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் 20 சதவீத எத்தனால் கலப்பு ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் நடப்பு ஆண்டில் எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு 10 சதவீதம் உயரும். வேளாண் கழிவுகளும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். 82 கோடி லிட்டர் எத்தனால் தேவை உள்ள நிலையில், 11 டிஸ்டிலரிகள் மூலம் 10 முதல் 11 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எத்தனால் கலப்பு பெட்ரோல் உற்பத்தி மூலம் வேலை வாய்ப்பு பெருகுவதோடு, சுற்றுச்சூழல் மாசும் குறையும். அத்துடன் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.
தமிழகத்தில் உணவு தானியங்களை சேமிக்க போதுமான வசதிகள் உள்ளன. இருப்பினும் தொலைவான பகுதிகளிலும் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொது வினியோக திட்டம் நாட்டிலேயே சிறப்பானது.
பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் 50 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் 43 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் ரூ. 34 ஆயிரம் கோடி மானியம் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘மேரா ரேஷன்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி 13 மொழிகளில் உள்ளதால் பயன்படுத்துவது எளிது. எனவே, அவர்கள் பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, தமிழக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ராஜாராமன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் உடனிருந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உணவுத்துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே வருகை தந்தார்.
அவர் ஊட்டியில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்தில் இருந்து அரிசி கொள்முதல் செய்த அளவு மும்மடங்காக உயர்ந்துள்ளது. 9 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து 29 லட்சம் மெட்ரிக் டன்னாக கொள்முதல் உயர்ந்துள்ளது.
அதேபோல, பெட்ரோல் நுகர்வில் நாட்டில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் 20 சதவீத எத்தனால் கலப்பு ஊக்குவிக்கப்படுகிறது. அதனால் நடப்பு ஆண்டில் எத்தனால் கலப்பு பெட்ரோல் பயன்பாடு 10 சதவீதம் உயரும். வேளாண் கழிவுகளும் எத்தனால் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். 82 கோடி லிட்டர் எத்தனால் தேவை உள்ள நிலையில், 11 டிஸ்டிலரிகள் மூலம் 10 முதல் 11 கோடி லிட்டர் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். எத்தனால் கலப்பு பெட்ரோல் உற்பத்தி மூலம் வேலை வாய்ப்பு பெருகுவதோடு, சுற்றுச்சூழல் மாசும் குறையும். அத்துடன் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும்.
தமிழகத்தில் உணவு தானியங்களை சேமிக்க போதுமான வசதிகள் உள்ளன. இருப்பினும் தொலைவான பகுதிகளிலும் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் பொது வினியோக திட்டம் நாட்டிலேயே சிறப்பானது.
பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசு மக்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது வரவேற்கத்தக்கது.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் 50 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர். கொரோனா காலகட்டத்தில் 43 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் ரூ. 34 ஆயிரம் கோடி மானியம் மக்களுக்கு சென்றடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘மேரா ரேஷன்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி 13 மொழிகளில் உள்ளதால் பயன்படுத்துவது எளிது. எனவே, அவர்கள் பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, தமிழக உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ராஜாராமன், நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் உடனிருந்தனர்.