தமிழ்நாடு
ஒமைக்ரான் வைரஸ்

சிங்கப்பூரில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை

Published On 2021-12-05 09:18 GMT   |   Update On 2021-12-05 09:18 GMT
நாகர்கோவில் வாலிபர் தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனிவார்டில் கொரோனா பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகர்கோவில்:

சிங்கப்பூரில் இருந்து நாகர்கோவில் வந்தவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை தொடர்ந்து அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. அவை பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று பகல் அவரது ஆய்வு அறிக்கை குமரி மாவட்ட சுகாதார துறைக்கு வந்தது. அதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து குமரி மாவட்ட சுகாதார துறையினர் நிம்மதி அடைந்தனர். நாகர்கோவில் வாலிபர் தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி தனிவார்டில் கொரோனா பாதிப்புக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News