செய்திகள்
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7815 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2021-11-27 03:30 GMT   |   Update On 2021-11-27 03:30 GMT
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

ஈரோடு:

பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 104 அடியாக நீடித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வந்தது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு 7 ஆயிரத்து 815 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 1500 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 6300 கனஅடி என மொத்தம் 7800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானி ஆற்றில் 6300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News