செய்திகள்
கோப்புப்படம்

தி.நகர் ரங்கநாதன் தெருவில் ‘மாஸ்க்’ அணியாமல் சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை- தடுப்பூசி

Published On 2021-11-03 09:23 GMT   |   Update On 2021-11-03 09:23 GMT
தி.நகர் ரங்கநாதன் தெருவில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பிடித்து கொரோனா பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
சென்னை:

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தி.நகர் உள்ளிட்ட வணிகப் பகுதிகளில் இன்று பொதுமக்கள் அதிகளவில் திரண்டு பொருட்களை வாங்கினார்கள். தி.நகர் ரங்கநாதன் தெருவில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கூட்ட நெரிசலை கண்டு கொள்ளாமல் பலர் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக சென்றனர். அதுபோன்று மாஸ்க் அணியாமல் சென்றவர்களை காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் பிடித்து கொரோனா பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று கூட்டத்துக்குள் மாஸ்க் அணியாமல் சென்றவர்களை மடக்கி பிடித்த போலீசார் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளீர்களா? என்று விசாரணை நடத்தினர். அப்போது தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசியும் போட்டு அனுப்பி வைத்தனர்.

இதனை கேள்விப்பட்டு முககவசம் அணியாமல் சென்ற பலர் அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் முககவசங்களை வாங்கி அணிந்ததை காணமுடிந்தது.

இதுபோன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் தி.நகர் ரங்கநாதன் தெரு இன்று பரபரப்பாக காணப்பட்டது.
Tags:    

Similar News