செய்திகள்
கருப்பு பூஞ்சை

திருப்போரூரில் அ.தி.மு.க. பெண் பிரமுகர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

Published On 2021-06-04 11:00 IST   |   Update On 2021-06-04 11:00:00 IST
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அதிமுக பெண் பிரமுகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்போரூர்:

திருப்போரூர் கண்ணகப்பட்டு படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி பாரதி (வயது 53). அ.தி.மு.க. மகளிர் அணி ஒன்றிய அவைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.

இவருக்கு கடந்த மாதம் 20-ந் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து காய்ச்சல் சரியாகாததால் கடந்த 25-ந்தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே பாரதிக்கு கண்ணிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 31-ந் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோயால் அவர் நேற்று காலை இறந்தார். இதையடுத்து அவரது உடலை பெருங்குடி மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

Similar News