செய்திகள்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-05-11 06:02 GMT   |   Update On 2021-05-11 06:02 GMT
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்திருந்த நிலையில், இரண்டாவது அலையின் காரணமாக கொரோனாவின் கோரதாண்டவம் அதிகரித்துள்ளது.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தனிமைபடுத்திக் கொண்ட கலெக்டர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.



இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இரவோடு இரவாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மாவட்ட கலெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட தகவல் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News