செய்திகள்
விபத்து

வேலூர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபத்தில் பலி

Published On 2021-03-19 14:58 IST   |   Update On 2021-03-19 14:58:00 IST
வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ஸ்ரீஹரி (வயது 28). விஜய் மக்கள் இயக்க மாணவரணி நிர்வாகியாகவும் 32-வது வார்டு கடை துணை செயலாளராகவும் இருந்தார். இவர் நேற்று மாலை ஆற்காட்டில் இருந்து வேலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெருமுகை அருகே வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News