செய்திகள்
கைது

ஆரணி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் கைது

Published On 2021-02-06 05:33 IST   |   Update On 2021-02-06 05:33:00 IST
ஆரணி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமி, பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள ஜவுளி கடையில் கூலி வேலை செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது பாட்டி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக டாக்டர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி மற்றும் போலீசார் சிறுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தவாசல் அருகே ஏ.கே. படவேடு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ராஜி (வயது 19) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததும் இதனால் சிறுமி கர்ப்பமானதும் தெரியவந்துள்ளது.

அதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளூர் சிறையில் அடைத்தனர்.

Similar News