செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி மதிப்புள்ள போதை மாத்திரை பறிமுதல்

Published On 2021-02-05 09:11 GMT   |   Update On 2021-02-05 09:11 GMT
சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி மதிப்புள்ள போதை மாத்திரை, பவுடரை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு வந்திருந்த 3 பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். மேல்புறத்தில் வலி நிவாரணி என்று எழுதப்பட்ட பார்சல்களில் 27 கிலோ போதை மாத்திரை-பவுடர் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும். பார்சலில் உள்ள முகவரியை வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தை தொழிலாளர்கள் சுத்தம் செய்தபோது கழிவறையில் இருந்த பார்சலில் 1 கிலோ 200 கிராம் கடத்தல் தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும். அதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News