ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட வேண்டி அவரது ரசிகர்கள் உண்ணாவிரதம்
ஆற்காடு:
நடிகர் ரஜினி டிசம்பர் 31-ந்தேதி புதிதாக கட்சியை தொடங்கி அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை. எனவே கட்சி தொடங்கப்போவதில்லை. அரசியலுக்கும் வரப்போவதில்லை என திடீரென அறிவித்தார்.
ரஜினி அரசியல் கட்சியை தொடங்கி மக்கள் பணியாற்றுவார் என எதிர்பார்த்து காத்திருந்த அவரது ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் அவரது அறிவிப்பால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ரஜினி கட்சியை தொடங்கி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி ரஜினி வீட்டு முன்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆற்காடு அடுத்த வேப்பூர் வசிஷ்டேஸ்வரர் கோவில் முன்பு ரஜினி பூரண உடல் நலம் பெற்று அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டி அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்தனர்.
ஆற்காடு நகர செயலாளர் ஏ.எம்.வரதன், ஒன்றிய செயலாளர் வி.எம்.சேட்டு, திமிரி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் உள்பட 100-க்கும் மேற்பட்ட மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக வசிஷ்டேஸ்வரர் கோவிலில் ரஜினி பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை செய்தனர்.