செய்திகள்
திமுக-வுடன் சுமுகமாக பேசி கணிசமான இடங்களை பெறுவோம்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சுமுகமாக பேசி கணிசமான இடங்களை பெறுவோம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் ஏர் கலப்பையுடன் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தான் கட்சியைத் தொடங்குவார். ஏன் என்றால் அன்றைக்கு தான் முட்டாள்கள் தினமாகும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்தால் அதிக பாதிப்பு அ.தி.மு.க.வுக்குத்தான் ஏற்படும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் சுமூகமாக பேசி, கணிசமான இடங்களைப் கேட்டுப்பெறுவோம். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. அவருடைய செல்வாக்கே தனியானது. வேல் யாத்திரை நடத்தினாலும், எத்தனை கோடி செலவு செய்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் ஏர் கலப்பையுடன் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தான் கட்சியைத் தொடங்குவார். ஏன் என்றால் அன்றைக்கு தான் முட்டாள்கள் தினமாகும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்தால் அதிக பாதிப்பு அ.தி.மு.க.வுக்குத்தான் ஏற்படும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் சுமூகமாக பேசி, கணிசமான இடங்களைப் கேட்டுப்பெறுவோம். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. அவருடைய செல்வாக்கே தனியானது. வேல் யாத்திரை நடத்தினாலும், எத்தனை கோடி செலவு செய்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.