செய்திகள்
கைது

தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2020-12-10 15:08 GMT   |   Update On 2020-12-10 15:08 GMT
தண்டராம்பட்டு அருகே பள்ளி மாணவியை கற்பழித்து 5 மாத கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தண்டராம்பட்டு:

திருவண்ணாமலையை சேர்ந்தவர் 15 வயது பள்ளி மாணவி. இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவி வீட்டில் இருந்து வருகிறார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்

இந்த நிலையில் தண்டராம்பட்டு அருகில் உள்ள தானிப்பாடியை அடுத்த பி.குயிலம் கிராமத்தை சேர்ந்த மாணவியின் உறவினர் கணேசன் (வயது 23) என்பவர் அடிக்கடி மாணவியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஆசை வார்த்தை கூறி மாணவியை கற்பழித்துள்ளார். இதனை மாணவி பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து வந்துள்ளார்

நேற்று முன்தினம் மாணவிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச்சென்று பரிசோதித்தபோது மாணவி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தபோது கணேசன் தன்னை தொடர்ந்து கற்பழித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாணவியின் தாயார் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கணேசனை கைது செய்து, தண்டராம்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News