செய்திகள்
கொரோனா வைரஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-09-12 03:29 GMT   |   Update On 2020-09-12 03:29 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,298ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,151-ஆக இருந்தது. 8,234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 147 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,298-ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News