செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-09-07 18:01 GMT   |   Update On 2020-09-07 18:01 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 215 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 776 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 215 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 930 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 89 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 402
செங்கல்பட்டு - 2,657
சென்னை - 11,145
கோவை - 4,650
கடலூர் - 3,605
தர்மபுரி - 297
திண்டுக்கல் - 1,028
ஈரோடு - 1,178
கள்ளக்குறிச்சி - 1,159
காஞ்சிபுரம் - 1,369
கன்னியாகுமரி - 856
கரூர் - 385
கிருஷ்ணகிரி - 593 
மதுரை - 1,046
நாகை - 1,029
நாமக்கல் - 661
நீலகிரி - 381
பெரம்பலூர் - 94
புதுக்கோட்டை - 955
ராமநாதபுரம் - 337
ராணிப்பேட்டை - 806
சேலம் - 2,750
சிவகங்கை - 217
தென்காசி - 625
தஞ்சாவூர் - 1,081
தேனி - 860
திருப்பத்தூர் - 434
திருவள்ளூர் - 1,757
திருவண்ணாமலை - 1,558
திருவாரூர் - 683
தூத்துக்குடி - 714
திருநெல்வேலி - 1,126
திருப்பூர் - 1,223
திருச்சி - 907
வேலூர் - 1,119
விழுப்புரம் - 1,010
விருதுநகர் - 429
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 20
உள்நாடு - 67
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

மொத்தம் - 51,215

Tags:    

Similar News