செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லையில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-09-03 10:30 IST   |   Update On 2020-09-03 10:30:00 IST
நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,945 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை:

தமிழகத்தில் நேற்று 5 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 39 ஆயிரத்து 959 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 891 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்து 063 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,945 ஆக அதிகரித்துள்ளது.

Similar News