செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

செங்கல்பட்டில் இன்று மேலும் 364 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-09-02 16:26 IST   |   Update On 2020-09-02 16:26:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,873 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 031 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,873 ஆக அதிகரித்துள்ளது.

Similar News