செய்திகள்
வீட்டு தனிமையில் இருப்பவர்கள் விதிகளை மீறினால் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
வீட்டு தனிமையில் இருப்பவர்கள் விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அருண் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் உள்ள நபர்களின் எண்ணிக்கை மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளன. இவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதாக புகார்கள் வந்துள்ளன. இது கொரோனா நோய் தொற்று மேலும் பரவுவதற்கான கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.
வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் இருப்பவர்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால் வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறையினர் கண்காணித்து புகார் பதிவு செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். எனவே பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 மற்றும் தொற்று நோய் சட்டம் 1897 ஆகியவற்றின் கீழ் மாவட்ட ஆட்சித்துறை நடுவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் கீழ்கண்ட உத்தரவுகள் நடைமுறைக்கு வருகின்றன.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.