Published On 2020-08-22 04:05 GMT | Update On 2020-08-22 04:05 GMT
சென்னை பூந்தவல்லி அருகே மின்கசிவு காரணமாக 9 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தது.
சென்னை:
சென்னை பூந்தவல்லி கலைஞர் நகரில் மின்கசிவு காரணமாக அடுத்தடுத்து 9 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தது. வீடுகளில் இருந்த கட்டில், பீரோ உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.
இந்த தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.