செய்திகள்
வேளாங்கண்ணி மாதா பேராலயம்

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா ஆக.29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2020-08-14 10:16 GMT   |   Update On 2020-08-14 10:16 GMT
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை அடுத்த வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களால் `கீழை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் சிறப்புகள் வாய்ந்த இந்த பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் செப்.7ந்தேதி பெரிய தேர் விழாவும், செப்.8ந்தேதி கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இன்றி எளிமையான முறையில் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News