செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா

Published On 2020-08-03 08:41 GMT   |   Update On 2020-08-03 08:41 GMT
வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6,490 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 171 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 6,490 ஆக அதிகரித்துள்ளது.

வேலூரில் 65 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 5,378 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Tags:    

Similar News