செய்திகள்
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

மாரண்டஅள்ளி அருகே பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

Published On 2020-07-07 07:15 GMT   |   Update On 2020-07-07 07:15 GMT
மாரண்டஅள்ளி அருகே பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பாலக்கோடு:

மாரண்டஅள்ளி அருகே கொரோனாவில் இருந்து பாதுகாக்க தொட்டபடகாண்டஅள்ளி கிராம இளைஞர்கள் ஒன்று இணைந்து டி.பி.எச். கிராம வளர்ச்சி குழு என்ற சேவை குழுவை அமைத்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் மற்றும் முககவசம், தூய்மை பணியாளர்களுக்கு முககவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டன.

கொரோனா நோய்த் தொற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பஞ்சப்பள்ளி மருத்துவமனை டாக்டர் மற்றும் சுகாதார ஆய்வாளர், கிராம செவிலியர், சாமனூர் ஊராட்சி மன்றத்தலைவர் குட்டி வெங்கடேஷ், சாமனூர் ஒன்றிய கவுன்சிலர் லாவண்யா ராஜா, கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், கிராம வார்டு கவுன்சிலர்கள் திருமால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News