செய்திகள்
கோப்புப்படம்

புதுச்சேரியில் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Published On 2020-07-06 10:13 IST   |   Update On 2020-07-06 10:13:00 IST
புதுச்சேரியில் ஒரேநாளில் 65 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,011ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் 6,97,413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,53,287 சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,24,433 குணமடைந்துள்ளனர். 19,693 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் ஒரேநாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,011ஆக உயர்ந்துள்ளது.

Similar News