செய்திகள்
எஜமானரை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரை விட்ட நாய்
தனது எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்டு இறுதியில் தனது உயிரைவிட்ட நாயை நினைத்து அப்பகுதியில் உள்ளவர்கள் சோகமடைந்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் நவநீதன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் அறந்தாங்கியில் அரிசி மில் நடத்தி வருகிறார்.
ஊரடங்கால் நவநீதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வந்தனர். இவர் வீட்டில் நாய் ஒன்று வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் வாசலில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு வந்து உள்ளது.
இதைப்பார்த்த நாய், தனது எஜமானரை காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்டு பாம்பை கொன்றது. பாம்பு கடித்ததில் சிறிது நேரத்தில் நாயும் இறந்தது. வீட்டு எஜமானரை பாம்பிடம் இருந்து காப்பாற்ற தனது உயிரைவிட்ட நாயை நினைத்து அப்பகுதியில் உள்ளவர்கள் சோகமடைந்தனர்.