செய்திகள்
போதைக்காக மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி சாவு - 4 பேருக்கு தீவிர சிகிச்சை
கடலூர் அருகே போதைக்காக மெத்தனாலில் தண்ணீர் கலந்து குடித்த தொழிலாளி உயிர் இழந்தார். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரகாசி (வயது 50). தொழிலாளி. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் (50), எழில்வாணன்(35), சுந்தர்ராஜ் மற்றும் ஆணையம்பேட்டையை சேர்ந்த குமரேசன் (26) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 5 பேருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது குடிக்க முடியாமல் தவித்த 5 பேரும், எங்காவது மது கிடைக்குமா? என்று பல்வேறு இடங்களில் விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் வைத்து போதைக்காக ஒரு திரவத்தை குடித்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அவரவர் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். நள்ளிரவில் திடீரென சந்திரகாசிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால் சந்திரகாசி அலறி துடித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சந்திரகாசியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே மாயகிருஷ்ணன், எழில்வாணன், சுந்தர்ராஜ், குமரேசன் ஆகியோருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர்களும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரகாசி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்த குமரேசன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் திரவத்தை தனது கிராமத்துக்கு எடுத்து சென்றார். பின்னர் அதை தண்ணீரை கலந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து போதைக்காக குடித்துள்ளார். இதில் சந்திரகாசி உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்தது. இதற்கிடையே மெத்தனால் திரவம் வெளியே கொண்டு செல்லும் வகையில் செயல்பட்ட, சம்பந்தப்பட்ட ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரகாசி (வயது 50). தொழிலாளி. இவரும், அதே கிராமத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் (50), எழில்வாணன்(35), சுந்தர்ராஜ் மற்றும் ஆணையம்பேட்டையை சேர்ந்த குமரேசன் (26) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 5 பேருக்கும் மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மது குடிக்க முடியாமல் தவித்த 5 பேரும், எங்காவது மது கிடைக்குமா? என்று பல்வேறு இடங்களில் விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் வைத்து போதைக்காக ஒரு திரவத்தை குடித்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் அவரவர் வீட்டுக்கு திரும்பி சென்றுவிட்டனர். நள்ளிரவில் திடீரென சந்திரகாசிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால் சந்திரகாசி அலறி துடித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், சந்திரகாசியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே மாயகிருஷ்ணன், எழில்வாணன், சுந்தர்ராஜ், குமரேசன் ஆகியோருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர்களும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரகாசி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் பூச்சிக்கொல்லி ஆலையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்த குமரேசன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் திரவத்தை தனது கிராமத்துக்கு எடுத்து சென்றார். பின்னர் அதை தண்ணீரை கலந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து போதைக்காக குடித்துள்ளார். இதில் சந்திரகாசி உயிரிழந்து விட்டார் என்பது தெரியவந்தது. இதற்கிடையே மெத்தனால் திரவம் வெளியே கொண்டு செல்லும் வகையில் செயல்பட்ட, சம்பந்தப்பட்ட ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.