செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

Published On 2020-04-13 13:01 IST   |   Update On 2020-04-13 13:01:00 IST
கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 41 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 13 பேருக்கு கெரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று அறிகுறி உறிதியானது.

இந்த நிலையில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படாத 28 பேரிடம் கொரோனா மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவு நேற்று வெளியானது. இதில் கூடுதலாக 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இது தவிர 29 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவரவேண்டியது உள்ளது.

Similar News